/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவம்
/
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவம்
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவம்
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவம்
ADDED : ஜூலை 26, 2025 11:27 PM

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவம் ஆக.,1ல் கொடியேற்றத் துடன் துவங்க உள்ளது.
பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பரமசுவாமி அருள் பாலிக்கிறார்.
ஆண்டு முழுவதும் மதுரை அழகர் கோயிலுக்கு இணையாக உற்ஸவங்கள் நடக் கிறது.
பரமக்குடியின் அழகர் கோயில் என அழைக்கப்படும் நிலையில், ஜூலை 31 இரவு அனுக்ஞையுடன் விழா துவங்குகிறது.
ஆக.,1 காலை 9:15 மணிக்கு கொடி மரத்தில் கருட கொடியேற்றப்படும். இரவு அன்ன வாகனத்தில் பெருமாள் வீதி உலா வருகிறார்.
தினமும் பெருமாள் சிம்மம், சேஷ, கருட, அனுமார் வாகனங்களில் எழுந்தருளுவார். ஆக.,6 இரவு யானை வாகனத்தில் பெருமாள் புறப்பாடாகி, ஆண்டாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. திருமண வரம், குழந்தை பேறு வேண்டுவோர் நேர்த்திக்கடன் செலுத்துவர். மறுநாள் பூ பல்லக்கில் பவனி வருவார்.
ஆக.,8 காலை தவழும் கண்ணனாக முத்து பல்லக்கில் உலா வந்து வைகை ஆற்றில் இறங்குவார்.
அன்று வைகையில் பவுர்ணமி நிலா ஒளியில் இரவு 11:00 மணிக்கு குதிரை வாகனத்தில் அலங்காரமாகி திருக்கோயிலை அடைவார்.
மறுநாள் காலை ஆடி தேரோட்டம் நடக்கிறது. ஆக., 10 காலை தீர்த்தவாரி, இரவு கொடி இறத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.