sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடி பெருமாள் கோயிலில் ஆடித் தேரோட்டம் கோலாகலம் இன்று தீர்த்தவாரி, கொடிஇறக்கம்

/

பரமக்குடி பெருமாள் கோயிலில் ஆடித் தேரோட்டம் கோலாகலம் இன்று தீர்த்தவாரி, கொடிஇறக்கம்

பரமக்குடி பெருமாள் கோயிலில் ஆடித் தேரோட்டம் கோலாகலம் இன்று தீர்த்தவாரி, கொடிஇறக்கம்

பரமக்குடி பெருமாள் கோயிலில் ஆடித் தேரோட்டம் கோலாகலம் இன்று தீர்த்தவாரி, கொடிஇறக்கம்


ADDED : ஆக 09, 2025 11:13 PM

Google News

ADDED : ஆக 09, 2025 11:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடித் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆக.,1 காலை கொடிமரத்தில் கருடாழ்வார் கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து ஆண்டாள், பெருமாள் மாலை மாற்றல் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று முன்தினம் இரவு பெருமாள் வைகை ஆற்றில் இருந்து குதிரை வாகனத்தில் அழகர் திருக்கோலத்தில் அலங்காரமாகி கோயிலை அடைந்தார்.

நேற்று காலை 11:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பெருமாள் எழுந்தருளி திருத்தேரில் அமர்ந்தார். அப்போது தீபாராதனைகள் முடிந்து, கருப்பண்ண சுவாமி சன்னதியில் விசேஷ தீபாராதனைகள் நடந்தது.

பின்னர் பக்தர்கள் கோவிந்தா கோஷம் விண்ணை முட்ட தேரை இழுத்து சென்றனர்.

ரதவீதிகளில் ஆடி அசைந்து சென்ற தேர் மதியம் 2:00 மணிக்கு நிலையை அடைந்தது. தேரில் வலம் வந்த பெருமாளுக்கு பக்தர்கள் தேங்காய் உடைத்து தரிசனம் செய்தனர்.

மேலும் கோயிலில் பக்தர்கள் நுாற்றுக்கணக்கான தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு சயன கோலத்தில் பட்டு பல்லக்கில் எழுந்தருளி வலம் வந்தார்.

இன்று காலை தீர்த்த வாரி, இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us