sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கொம்பூதி செல்லும் ரோட்டில் ஓடையில் தூம்பு பாலம் சேதம்; தொடரும் விபத்துக்கள்

/

கொம்பூதி செல்லும் ரோட்டில் ஓடையில் தூம்பு பாலம் சேதம்; தொடரும் விபத்துக்கள்

கொம்பூதி செல்லும் ரோட்டில் ஓடையில் தூம்பு பாலம் சேதம்; தொடரும் விபத்துக்கள்

கொம்பூதி செல்லும் ரோட்டில் ஓடையில் தூம்பு பாலம் சேதம்; தொடரும் விபத்துக்கள்


ADDED : மார் 15, 2024 11:43 PM

Google News

ADDED : மார் 15, 2024 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலாடி : கடலாடி அருகே கொம்பூதி செல்லும் சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட துாம்பு பாலம் சேதமடைந்துள்ளதால் விபத்துக்கள் நடக்கிறது.

கடலாடியில் இருந்து கோவிலாங்குளம் ரோடு செல்வதற்கு மங்களம் கிராமத்தின் வழியாக கொம்பூதி கிராமத்திற்கான வழித்தடம் செல்கிறது. 70 மீ., நீளத்தில் ஓடையின் குறுக்காக பெரிய துாம்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அது சரியான முறையில் சமமாக செம்மைப்படுத்தாமல் அதன் மீது தார்ரோடு போடப்பட்டுள்ளதால் துாம்பின் இடைவெளியில் அமைக்கப்பட்ட தார் ரோடால் மேடு பள்ளம் ஆகியுள்ளது.

கடலாடி வில்வ சக்திநாதன் கூறியதாவது: கொம்பூதி - மங்களம் இடையே பெரிய பாலத்தில் இருந்து இரண்டாவது ஓடையில் துாம்புகள் சரியாக பதிக்கப்படாததால் 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஜிக்ஜாக் எனப்படும் மேடு பள்ளம் உருவாகியுள்ளது.

2 மாதங்களில் 5 பேர் விபத்தில் காயமடைந்துள்ளனர். துாம்பு பாலத்தினை முறையாக சமன் செய்து குறைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us