/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோட்டில் மாட்டை அவிழ்த்து விட்டால் நடவடிக்கை: பேரூராட்சி எச்சரிக்கை
/
ரோட்டில் மாட்டை அவிழ்த்து விட்டால் நடவடிக்கை: பேரூராட்சி எச்சரிக்கை
ரோட்டில் மாட்டை அவிழ்த்து விட்டால் நடவடிக்கை: பேரூராட்சி எச்சரிக்கை
ரோட்டில் மாட்டை அவிழ்த்து விட்டால் நடவடிக்கை: பேரூராட்சி எச்சரிக்கை
ADDED : டிச 20, 2024 02:37 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் பகுதியில் ரோடுகளில் மாடுகளை அவிழ்த்து விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சித்துறையினர் எச்சரித்துள்ளனர்.
முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்தி சிலையிலிருந்து பஸ் ஸ்டாண்ட், பஜார் தெரு, அரசு மருத்துவமனை, போலீஸ் ஸ்டேஷன், ஆற்றுப்பாலம் வரை 300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இந்நிலையில் வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகள் அவிழ்த்து விடப்படுவதால் ரோட்டில் சுற்றித் திரிகின்றன.
வாகனங்களுக்கு இடையூறாக மாடுகள் சுற்றித் திரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அவ்வப்போது மாடுகள் சண்டையிடுவதால் நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
முதுகுளத்துார் பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
பேரூராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகள் ரோட்டோரங்களில் அழித்து விடப்படுவது தடுக்கப்பட வேண்டும்.
இனி வரும் நாட்களில் மாடுகள் ரோடுகளில் சுற்றித் திரிந்தால் மாடுகளை பிடித்து விருதுநகர் கோசாலையில் அடைக்கப்படும். மாடுகளின் உரிமையாளர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.