/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் கூடுதல் பதிவாளர் ஆய்வு
/
வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் கூடுதல் பதிவாளர் ஆய்வு
வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் கூடுதல் பதிவாளர் ஆய்வு
வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் கூடுதல் பதிவாளர் ஆய்வு
ADDED : ஜூலை 10, 2025 11:38 PM
கமுதி: கமுதி கண்ணார்பட்டி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கூடுதல் பதிவாளர் சீனிவாசன் ஆய்வு செய்தார்.
கமுதி கண்ணார்பட்டி அருகே வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு கூடுதல் பதிவாளர் சீனிவாசன் (விற்பனை திட்டம் மற்றும் வளர்ச்சி) ஆய்வு செய்தார். அப்போது கூட்டுறவு விற்பனை சங்கத்தில் உள்ள சேமிப்பு கிடங்குகளை பார்வையிட்டார்.
விவசாயிகளிடமிருந்து அதிகளவில் விளைபொருட்களை கொள்முதல் செய்து வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு விற்பனை செய்யவும், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ள ஆர்கானிக் மிளகாயை பாதுகாப்பது.
மேலும் கூடுதல் கிடங்குகள் அமைத்து சேமிப்பு பயன்பாட்டை அதிகப்படுத்தவும், உரம், விவசாய விளைபொருட்கள் கொள்முதல், விற்பனை நடவடிக்கைகளை அதிகப்படுத்தவும், இப்பகுதியில் விளையும் குண்டு மிளகாய்யை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்திட பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறினார்.
உடன் மண்டல இணைப்பதிவாளர் ஜினு, மத்திய கூட்டுறவு வங்கி மண்டல இணைப்பதிவாளர் ராஜலட்சுமி, துணை பதிவாளர் ரத்தினவேல், மேலாண்மை இயக்குனர் ப்ரீத்தி உட்பட அதிகாரிகள் பலர் இருந்தனர்.