/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் தேர்தல் பணியில் ஆர்வமில்லாத அ.தி.மு.க.,வினர்
/
ராமநாதபுரத்தில் தேர்தல் பணியில் ஆர்வமில்லாத அ.தி.மு.க.,வினர்
ராமநாதபுரத்தில் தேர்தல் பணியில் ஆர்வமில்லாத அ.தி.மு.க.,வினர்
ராமநாதபுரத்தில் தேர்தல் பணியில் ஆர்வமில்லாத அ.தி.மு.க.,வினர்
ADDED : மார் 15, 2024 11:28 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணி, பா.ஜ.வினர் பிரசாரத்தை துவங்கியுள்ள நிலையில், அ.தி.மு.க.,வில் வேட்பாளராக யாரை நிறுத்துவது என முடிவு செய்யவில்லை, தேர்தல் பணியில் ஆர்வமின்றி உள்ளனர்.
ராமநாதபுரம் லோக்சபா தொகுதி தி.மு.க., கூட்டணியில் மீண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, வேட்பளராக சிட்டிங் எம்.பி., நவாஸ்கனி தேர்தல்பணிக்குழு, பூத் ஏஜென்ட பணிகளை துவங்கி, முக்கிய நிர்வாகிகளிடம் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
அ.தி.மு.க., தரப்பில் இதுவரை வேட்பாளரை தேர்வு செய்யவில்லை. மேலும் இம்முறை பா.ஜ., உடன், கூட்டணி இல்லாத நிலையில், பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் அணியும் கை கோர்த்துள்ளதால், ராமநாதபுரம் தொகுதியில் அ.தி.மு.க., வெற்றி கேள்விக்குறியாக உள்ளது.
மாஜி அமைச்சர்களான மணிகண்டன், அன்வர் ராஜா, மாவட்டச்செயலாளர் முனிசாமியின் மனைவி மாநில மகளிர் அணி இணைச்செயலாளர் கீர்த்திகா ஆகியோர் விருப்பமனு அளித்துள்ளனர்.
இவர்கள் கட்சி சொன்னால் பார்த்துக் கொள்வோம், மற்றபடி எனக்குதான் சீட் வேணும் என்ற அளவிற்கு யாரும் ஆர்வம் காட்டவில்லை.

