sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

திருவாடானை தபால் அலுவலகத்தில் ஆதார் பதிவு செய்யாததால் பாதிப்பு

/

திருவாடானை தபால் அலுவலகத்தில் ஆதார் பதிவு செய்யாததால் பாதிப்பு

திருவாடானை தபால் அலுவலகத்தில் ஆதார் பதிவு செய்யாததால் பாதிப்பு

திருவாடானை தபால் அலுவலகத்தில் ஆதார் பதிவு செய்யாததால் பாதிப்பு


ADDED : மார் 06, 2024 06:50 AM

Google News

ADDED : மார் 06, 2024 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை : திருவாடானை தபால் அலுவலகத்தில் ஆதார் பதிவு சேவை இல்லாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆதார் அட்டை அத்தியாசியத் தேவைகளில் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனை பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில் தபால் நிலையங்கள் தோறும் ஆதார் பதிவு துவங்கப்பட்டது. ரூ.50 கட்டணத்தில் ஆதார் அட்டைகளில் பிழைகள் திருத்தம் செய்யும் வசதியும் உண்டு.

ஆதார் பதிவு, பெயர் மாற்றம், முகவரி மாற்றம் செய்ய பெரும்பாலோர் தபால் நிலையங்களில் இச்சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

இருந்த போதும் இதற்கென தனியாக அலுவலர் இல்லை. தபால் நிலைய ஊழியர்களே இப்பணியை கூடுதலாக செய்து வருகின்றனர்.

திருவாடானையை தலைமையிடமாகக் கொண்டு 12க்கும் மேற்பட்ட கிளை தபால் அலுவலகங்கள் உள்ளன. இதில் சின்னக்கீரமங்கலம், தொண்டி, மங்களக்குடி ஆகிய தபால் நிலையங்களில் மட்டுமே இச்சேவை உள்ளது. திருவாடானையில் ஆதார் பதிவு இல்லாததால் பொதுமக்கள் பாதிக்கபட்டுள்ளனர்.

திருவாடானை தபால் அலுவலக ஊழியர்கள் கூறுகையில், ஆதார் பதிவு செய்யும் அலுவலர்களுக்கு தனியாக ஐ.டி., வழங்கப்படும். இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு ஐ.டி., வழங்காததால் ஆதார் பதிவு செய்ய முடியவில்லை. ஐ.டி., வழங்கபட்டவுடன் ஆதார் பதிவு சேவை துவங்கும் என்றனர்.






      Dinamalar
      Follow us