/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
3 நாட்களுக்கு பின் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்
/
3 நாட்களுக்கு பின் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்
3 நாட்களுக்கு பின் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்
3 நாட்களுக்கு பின் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்
ADDED : ஜன 04, 2025 11:08 PM
ராமேஸ்வரம்:சூறாவளியின் வேகம் தணிந்ததால் 3 நாட்களுக்கு பின் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
வடகிழக்கு பருவக்காற்று தீவிரமடைந்து வங்கக் கடலில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்படும் என வானிலை மையம் தெரிவித்தது. இதனால் ஜன.1 முதல் ராமேஸ்வரம் பகுதியில் சூறாவளி வீசி கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பால் ராட்சத அலைகள் எழுந்தன. இச்சூழலில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வது சிரமம் என்பதால் அன்று முதல் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர்.
இதனால் ராமேஸ்வரம் பகுதியில் 1500 விசைப்படகுகள், நாட்டுப்படகுகளை கரையில் நிறுத்தி வேலையின்றி மீனவர்கள் வீடுகளில் முடங்கினர்.
நேற்று சூறைக் காற்றின் வேகம் தணிந்ததால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர் அனுமதித்தனர். இதனால் 3 நாட்களுக்கு பின் ராமேஸ்வரம், மண்டபத்தில் இருந்து 680 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.