/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆறு நாட்களுக்கு பின் மீன்வரத்து; ராமேஸ்வரம் மீனவர்கள் மகிழ்ச்சி
/
ஆறு நாட்களுக்கு பின் மீன்வரத்து; ராமேஸ்வரம் மீனவர்கள் மகிழ்ச்சி
ஆறு நாட்களுக்கு பின் மீன்வரத்து; ராமேஸ்வரம் மீனவர்கள் மகிழ்ச்சி
ஆறு நாட்களுக்கு பின் மீன்வரத்து; ராமேஸ்வரம் மீனவர்கள் மகிழ்ச்சி
ADDED : அக் 21, 2024 12:50 AM

ராமேஸ்வரம் : ஆறு நாட்களுக்குப் பின் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அதிக மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சி அடைந்தனர்.
வங்கக் கடலில் உருவான புயல் சின்னத்தால் அக்.,14 முதல் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறை தடை விதித்தது. 1500 விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தினர்.
இந்நிலையில் புயல் சின்னம் வலுவிழந்து காற்றின் வேகம் தணிந்ததால் வங்க கடலில் ராட்சத அலைகள் இன்றி இயல்பு நிலைக்கு மாறியது.
இதையடுத்து 6 நாட்களுக்கு பின் அக்.,19ல் ராமேஸ்வரத்தில் இருந்து 430 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடித்து விட்டு நேற்று காலை கரை திரும்பினார்கள். இலங்கை கடற்படை கெடுபிடி இல்லாததால் 90 சதவீதம் படகில் அதிகளவில் காரல் மீன் மற்றும் சூவாரை, வாவல் மீன்கள் சிக்கின.
இதில் ஐஸ்சில் பதப்படுத்திய காரல் மீன் கிலோ ரூ.35 முதல் 40க்கும், பதப்படுத்தாத காரல் மீன் ரூ.15 முதல் 18 வரை விற்றது. இதனால் எதிர்பார்த்த வருவாய் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.