ADDED : அக் 04, 2025 03:31 AM

அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை சிநேகவல்லிபுரம் கடம்பாகுடி கண்மாய்க்குள் ஜெயவீரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா செப்.,24 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு பக்தர்கள் அக்னிசட்டி, காவடி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
அன்னதானம், இரவில் கலைநிகழ்ச்சி நடந்தது. விழாவை முன்னிட்டு கோயில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
