sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மணற்பாங்கான பகுதிகளில் எள் சாகுபடி விழிப்புணர்வு ஏற்படுத்தாத வேளாண் துறை

/

மணற்பாங்கான பகுதிகளில் எள் சாகுபடி விழிப்புணர்வு ஏற்படுத்தாத வேளாண் துறை

மணற்பாங்கான பகுதிகளில் எள் சாகுபடி விழிப்புணர்வு ஏற்படுத்தாத வேளாண் துறை

மணற்பாங்கான பகுதிகளில் எள் சாகுபடி விழிப்புணர்வு ஏற்படுத்தாத வேளாண் துறை


ADDED : ஏப் 05, 2025 05:59 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 05:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புல்லாணி: மணற்பாங்கான பகுதிகளாக உள்ள திருப்புல்லாணி பகுதிகளில் எள் விவசாயம் செய்வதற்கு வேளாண் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

திருப்புல்லாணி சுற்றுவட்டாரப் பகுதிகளான வண்ணாங்குண்டு,

தினைக்குளம், பத்திராதரவை, நைனாமரைக்கான், ரெகுநாதபுரம் ஆகிய பகுதிகளில் அதிகளவு எள் சாகுபடி செய்துள்ளனர். நெல் விவசாயம் செய்த பிறகு அதே நிலத்தில் குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே ஆர்வம் உள்ள விவசாயிகள் எள் பயிரிட்டுள்ளனர்.

எண்ணெய் வித்து பயிரான எள் சாகுபடியை இரண்டாம் போகத்திற்கு பயன்படுத்தினால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெரும்பாலும் கோடை மழையில் எள் விவசாயம் விவசாயிகளுக்கு கை கொடுக்கிறது. எள் சாகுபடி விவசாயிகள் கூறியதாவது:

திருப்புல்லாணி வேளாண் துறை அலுவலகம் சார்பில் இரண்டாம் கட்ட சாகுபடி குறித்து உரிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது கிடையாது. விவசாயிகள் தங்களது ஆர்வத்தின் பேரில் குறிப்பிட்ட இடங்களில் குறைந்த அளவே எள் சாகுபடி செய்துள்ளனர். இயற்கை உரத்தை பயன்படுத்துகின்றனர்.

இன்றைய தேதியில் மார்க்கெட்டில் எள்ளுக்கு நல்ல விலை இருந்தும் அவற்றை முறையாக பயிரிடுவதற்கான ஆலோசனைகள், மானிய விபரங்கள் உள்ளிட்டவைகளை வழங்காமல் பெயரளவிற்கு கூட்டங்களுக்குச் சென்று அறிக்கை சமர்ப்பிப்பதில் மட்டுமே வேளாண் துறை அதிகாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் எள் விவசாயத்தை ஊக்குவித்தால் அதிகளவு எள் விவசாயம் இப்பகுதியில் மேலும் செழிப்பதற்கு வழிவகை ஏற்படும் என்றனர்.






      Dinamalar
      Follow us