sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வரிசை விதைப்பால் அதிக மகசூல் பெறலாம் விவசாயிகளுக்கு வேளாண்துறை யோசனை

/

வரிசை விதைப்பால் அதிக மகசூல் பெறலாம் விவசாயிகளுக்கு வேளாண்துறை யோசனை

வரிசை விதைப்பால் அதிக மகசூல் பெறலாம் விவசாயிகளுக்கு வேளாண்துறை யோசனை

வரிசை விதைப்பால் அதிக மகசூல் பெறலாம் விவசாயிகளுக்கு வேளாண்துறை யோசனை


ADDED : செப் 30, 2024 04:33 AM

Google News

ADDED : செப் 30, 2024 04:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்:' நெற்பயிர் வரிசை விதைப்பு முறையில் சரியான அளவில் பராமரிக்கப்படுவதால் அதிக மகசூல் கிடைக்கும் என வேளாண்மை துறை விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

முதுகுளத்துார் தாலுகா 100க்கும் கிராமங்களில் 20 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமாக மானாவாரி பயிராக நெல் பயிரிட்டு விவசாயம் செய்கின்றனர். தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் வரிசை விதைப்பு கருவி மூலம் விதைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காக்கூர் கிராமத்தில் வரிசை விதைப்பு பணியினை வேளாண்மை துணை இயக்குநர் அமர்லால் ஆய்வு செய்தார்.

அவர் கூறியதாவது, வரிசை விதைப்பு செய்வதால் களை எடுத்தல், மருந்து தெளித்தல், உரமிடுதல் பணிகளை சிரமமின்றி மேற்கொள்ள முடியும். பயிர் எண்ணிக்கை சரியான அளவில் பராமரிக்கப்படுவதால் நல்ல மகசூல் கிடைக்கும் என்றார்.

வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் உட்பட விவசாயிகள் பலரும் இருந்தனர்.

ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் ஜெயகண்ணன் செய்தார்.






      Dinamalar
      Follow us