/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அலையாத்தி காடுகள் தினவிழா மரக்கன்று நட்டு விழிப்புணர்வு
/
அலையாத்தி காடுகள் தினவிழா மரக்கன்று நட்டு விழிப்புணர்வு
அலையாத்தி காடுகள் தினவிழா மரக்கன்று நட்டு விழிப்புணர்வு
அலையாத்தி காடுகள் தினவிழா மரக்கன்று நட்டு விழிப்புணர்வு
ADDED : ஜூலை 28, 2025 03:41 AM

ராமநாதபுரம் : உலக அலையாத்தி காடுகள் தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்ட வனத்துறையினர் அழகன்குளத்தில் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வெப்பமண்டல பகுதிகளில் நிலத்திற்கும் கடலுக்கும் இடையே சதுப்புநிலக் காடுகள் எனும் அலையாத்திக் காடுகள் உருவாகின்றன. இவை கடலோரப் பகுதிகளில் ஏற்படும் மண் அரிப்பை தடுக்கிறது. மேலும், கடல்வாழ் உயிரனங்களின் வாழ்விடமாக விளங்குகிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அலையாத்தி காடுகளை பாதுகாக்க ஆண்டு தோறும் ஜூலை 26 உலக அலையாத்தி காடுகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்ட வனத்துறைத்துறை சார்பில் அழகன்குளம் நதிப்பாலம் அருகே அலையாத்தி காடுகளின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட வன அலுவலர் ஹேமலதா அலையாத்தி மரங்க்கன்றுகளை நட்டு நிகழ்வை தொடங்கி வைத்தார். கிராம மக்கள் சதுப்பு நிலப்பகுதியில் மரக்கன்றுகள் நட்டனர்.
தொண்டி: சம்பை கடற்கரை பகுதியில் மாங்குரோவ் மரக்கன்றுகள் நடப்பட்டன. வனச்சரகர் திவாகர் தலைமை வகித்தார். வனவர் ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து அக் கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.