ADDED : மே 11, 2025 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே மோர்ப்பண்ணை கலைவாணி அம்மன் கோயில் மூன்றாம் ஆண்டு சித்திரை விழா நடந்தது. முன்னதாக, விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினார்.
பக்தர்கள் கொண்டு வந்திருந்த பால் மூலம், மூலவர் அம்மனுக்கு அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜையில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.