ADDED : ஜூலை 13, 2025 11:04 PM
பரமக்குடி: -பரமக்குடி அருகே போகலுார் ஒன்றியம் அரியகுடிபுத்துாரில் சிவ சக்தி, அங்காள ஈஸ்வரி, மாசாணி அம்மன் கோயில் உள்ளது. இங்கு பேச்சி அம்மன், பகவதி அம்மன், கருப்பண்ணசுவாமி சன்னதிகள் உள்ளன.
ஜூலை 11ல் கணபதி ஹோமத்துடன் கும்பாபிேஷக விழா துவங்கி, நேற்று காலையில் கோபுர கலசங்கள் மற்றும் சுவாமிகளுக்கு கும்ப கலச நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டன. பக்தர்கள் பலர் தரிசனம் செய்தனர்.
திருவடாானை: திருவாடானை அருகே அஞ்சுகோட்டையில் புதிதாக கட்டபட்ட பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது.
முன்னதாக நேற்று முன்தினம் கர்மாங்க ஸ்நபனம், அக்னி பிரதிஷ்டை, தத்வாதி ேஹாமங்கள், பாராயணங்கள், பூர்ணாகுதி நடந்தது.
நேற்று அதிகாலையில் த்வாரபூஜை, பாலகாராதனம், சதுஸ்தானார்ச்சனம், சாந்தி ேஹாமம், ஸ்வப்னாதி ேஹாமம் நடந்தது. அதனை தொடர்ந்து 8:15 மணிக்கு கும்பத்தில் புனித நீர் ஊற்றபட்டது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது.
கமுதி: கமுதி அருகே எழுவனுார் கிராமத்தில் செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவில் நேற்று 2ம்கால யாக பூஜை,நாடி சந்தனம்,மஹா பூர்ணாஹீதி தீபாரதனை நடந்தது.பிறகு காலையில் விமான கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது. பின் செல்வ விநாயகர் பால்,சந்தனம்,மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாரதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.