/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அண்ணா பல்கலை பேராசிரியர்கள் போராட்டம்
/
அண்ணா பல்கலை பேராசிரியர்கள் போராட்டம்
ADDED : பிப் 07, 2026 05:36 AM

ராமநாதபுரம், ராமநாதபுரம் அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரியில் பதவிஉயர்வு வழங்க வலியுறுத்தி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அண்ணா பல்கலை ஆசிரியர் சங்கம் ராமநாதபுரம் வளாக தலைவர் மணிராஜன் தலைமை வகித்தார். அவர் கூறியதாவது:
அண்ணா பல்கலை யில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பல நிர்வாக மாற்றங்கள் ஏற்பட்ட போதும் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கவில்லை.
சென்னை பேராசிரியர்களுக்கு உடனடியாக வழங்கப்பட்ட நிலையில் உறுப்பு கல்லுாரி பேராசிரியர்களை புறக்கணிப்பதை கைவிட வேண்டும். இதனால் புதிதாக பேராசிரியர்கள் நியமிப்பதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்றார். நிகழ்வில் செயலாளர் சொர்ணகீர்த்தி, பேராசிரியர்கள் ஆறுமுகம், சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

