sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நுாபுர கங்கை தீர்த்தத்தில் பரமக்குடி அழகருக்கு அபிஷேகம் தைலக்காப்பு விழா கோலாகலம்

/

நுாபுர கங்கை தீர்த்தத்தில் பரமக்குடி அழகருக்கு அபிஷேகம் தைலக்காப்பு விழா கோலாகலம்

நுாபுர கங்கை தீர்த்தத்தில் பரமக்குடி அழகருக்கு அபிஷேகம் தைலக்காப்பு விழா கோலாகலம்

நுாபுர கங்கை தீர்த்தத்தில் பரமக்குடி அழகருக்கு அபிஷேகம் தைலக்காப்பு விழா கோலாகலம்


ADDED : நவ 15, 2024 06:45 AM

Google News

ADDED : நவ 15, 2024 06:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் உற்ஸவர் அழகருக்கு, மதுரை நுாபுர கங்கை தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, தைலக்காப்பு விழாவில் அபிஷேகம் நடத்தப்பட்டது.

மதுரை திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோயிலில் நடக்கும் அனைத்து உற்ஸவங்களும், பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நடக்கிறது. இதன்படி தைலக்காப்பு விழா துவங்கிய நிலையில் நேற்று முன்தினம் இரவு பெருமாள் கொண்டையில் சந்தனாதி திரவியங்களால் சிகையில் தேய்த்து அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது மஞ்சள், வெள்ளை மற்றும் பச்சை பட்டு உடுத்தி அலங்கரிக்கப்பட்டார். தீர்த்தவாரி மண்டபத்தில் மதுரை அழகர் கோயில் நுாபுர கங்கை நீர் எடுத்துவரப்பட்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு அபிஷேக தீர்த்தம் வழங்கப்பட்டது.

அழகர் ஏகாந்த சேவையில் அருள் பாலித்த நிலையில் மகா தீபாராதனைகள் நடந்தது. இன்று கருட வாகனத்தில் வீதி உலா வருகிறார். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us