sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா விண்ணப்பித்தவர்கள் காத்திருப்பு    

/

மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா விண்ணப்பித்தவர்கள் காத்திருப்பு    

மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா விண்ணப்பித்தவர்கள் காத்திருப்பு    

மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா விண்ணப்பித்தவர்கள் காத்திருப்பு    


ADDED : பிப் 17, 2024 10:53 PM

Google News

ADDED : பிப் 17, 2024 10:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி: தொண்டியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்தவர்கள் காத்திருக்கின்றனர்.

தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் அரசு அலுவலகங்களை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் அவர்களை சென்றடையும் திட்டம்.

திருவாடானை தாலுகா தொண்டி பேரூராட்சி சார்பில் ஜன.11 ல் இத்திட்ட முகாம் தொண்டி தனியார் மகாலில் நடந்தது.

முகாமில் சுகாதாரத்துறை, வீட்டுவசதி, காவல் துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, வருவாய்த்துறை, மின்வாரியம், பேரூராட்சி, இ-சேவை மையம், அரசு கட்டுமானம் மற்றும் ஓட்டுநர் அமைப்பு சாரா நல வாரியம், வாழ்வாதார கடன் உதவி, மாற்றுத் திறானிகள் நலத்துறை போன்ற அரசுத்துறைகள் சார்பில் தனித் தனியாக இடம் ஒதுக்கப்பட்டு அலுவலர்கள் நியமிக்கபட்டனர்.

பொதுமக்களிடமிருந்து 508 மனுக்கள் பெறப்பட்டன. அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை துறை அலுவலகங்களுக்கு அனுப்ப்பட்டு பெரும்பாலான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. இது குறித்து பெண்கள் கூறுகையில், மக்களுடன் முதல்வர் முகாமில் விண்ணப்பித்தோம். ஆனால் எந்த தகவலும் வராததால் ஏமாற்றம் அளிக்கிறது என்றனர்.






      Dinamalar
      Follow us