ADDED : மார் 04, 2026 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: ஏர்வாடி அருகே சின்ன ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தீயணைப்பு துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது. ஏர்வாடி தீயணைப்பு நிலைய சிறப்பு நிலை அலுவலர் மூர்த்தி, தீயணைப்பு வீரர் கோகுல கண்ணன், பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினர். ஆசிரியர்கள் தங்கமணி, மனோன்மணி, அம்பேத்குமார் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்தனர்.

