ADDED : ஜூலை 19, 2026 11:40 PM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த கடற்கரை கையுந்து பந்து போட்டியில் சித்தார்கோட்டை முகம்மதியா மேல்நிலைப்பள்ளி அணி 14, 17, 19 ஆகிய மூன்று வயது பிரிவுகளிலும் வெற்றி பெற்று மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த அணியினரை முகம்மதியா மேல்நிலைப்பள்ளி தாளாளர் காஜா மொயினுதீன், தலைமையாசிரியர் சுரேஷ் பாபு, உதவி தலைமை ஆசிரியர் முகமது சுகைப், உடற்கல்வி ஆசிரியர் அஜீஸ்கனி, ஜமாத்தார்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பாராட்டினர்.
