/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திரவுபதி அம்மன் கோயில் விழாவில் அரவான் களப்பலி
/
திரவுபதி அம்மன் கோயில் விழாவில் அரவான் களப்பலி
ADDED : செப் 27, 2024 04:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: பூக்குழி உற்ஸவ விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் வடக்கு தெருவில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் அரவான் களப்பலி நடந்தது.
திரவுபதி அம்மன் கோயிலில் செப்.16ல் காப்புக் கட்டுதலுடன் விழா துவங்கியது. தினமும் அபிேஷகம், அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. செப்.17ல் பூங்கரகம் எடுத்து வந்தனர். செப்.20ல் அர்ச்சுனன்- திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது.
செப்.24ல் கீசக வதம், செப்.25 இரவு அரவான் களப்பலி நடந்தது. இன்று (செப்.27ல்) இரவு 10:00மணிக்கு பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.