ADDED : ஜன 25, 2025 07:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் :   ராமநாதபுரம் நீகண்டி ஊருணி பகுதியில் கார் மெக்கானிக் ெஷட் வைத்திருப்பவர் அமர்நாத் 31. இவர்  மைத்துனர் சரவணக்குமாருடன் ராமநாதபுரம் தனியார் பள்ளி அருகேயுள்ள மதுபான பாரில் மது அருந்த சென்றனர்.
மது அருந்திய போது அருகில் இருந்தவர்கள் தகராறு செய்தனர். இதில் அமர்நாத்தை மூன்று பேர் சேர்ந்து தாக்கியதில் தலையில் காயம் ஏற்பட்டது. அமர்நாத் போலீசில் புகார் செய்தார். பேராவூரை சேர்ந்த கோபால் மகன் மனோஜ்குமார் 26, சிதம்பரம் மகன் சுதர்சன் 24, கூத்தையா மகன் கோபிநாத் 21, ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.

