sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லை ராணுவ வீரரின் வீடியோ குமுறல்

/

குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லை ராணுவ வீரரின் வீடியோ குமுறல்

குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லை ராணுவ வீரரின் வீடியோ குமுறல்

குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லை ராணுவ வீரரின் வீடியோ குமுறல்


ADDED : மே 14, 2025 02:36 AM

Google News

ADDED : மே 14, 2025 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே ஏனாதியை சேர்ந்த ராணுவ வீரர் முரளி ஜெகன் 25. இவரது தாய், மனைவியை உறவினர்கள் தாக்கிய நிலையில் குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி பேசிய வீடியோ பரவுகிறது.

ஏனாதியை சேர்ந்த முரளிஜெகன் பூடான் எல்லையில் பணியாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு ஏனாதி கிராமத்தில் வசிக்கும் தாய் முத்துமீனாள், மனைவி உமாராணி ஆகியோரை நிலப்பிரச்னையில் உறவினர்கள் சிலர் தாக்கினர்.

இதையறிந்த முரளிஜெகன் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், 'இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறேன். போர் பதற்றத்துடன் பணிபுரியும் நிலையில் நிலப்பிரச்னையால் எனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு இல்லை. இதுகுறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தார்.

இந்த வீடியோ பரவியதையடுத்து, முத்துமீனாள் புகாரில், ஏனாதியை சேர்ந்த ராமச்சந்திரன், கிழவி, கணேசன், தட்சிணாமூர்த்தி, பார்த்திபன், ஈஸ்வரி 6 பேர் மீதும், கிழவி புகாரில் முத்துமீனாள், உமாராணி, புஷ்பம் ஆகிய 3 பேர் மீதும் பேரையூர் எஸ்.ஐ., முருகன் வழக்குப்பதிவு செய்துள்ளார்.






      Dinamalar
      Follow us