/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டி
/
பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டி
ADDED : அக் 19, 2025 02:52 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் சுவார்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர்(பொ) பிரின்ஸ் ஆரோக்கியராஜ் போட்டிகளை துவக்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை) சங்கர், ஜெயந்தி (தனியார் பள்ளிகள்), மாவட்ட உதவி திட்ட அலுவலர் கணேச பாண்டியன் முன்னிலை வகித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சோபனா வரவேற்றார்.
போட்டியில் 1 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்கள் வண்ணம் தீட்டுதல், கதை கூறுதல், திருக்குறள் ஒப்புவித்தல், ரங்கோலி, களிமண் பொம்மைகள் செய்தல், நாடகம் உள்ளிட்டவைகளில் பங்கேற்றனர். முதலிடம் பெறும் மாணவர்கள் மாவட்ட அள விலான கலைபோட்டியில் பங்கேற்க உள்ளனர்.
ராமநாதபுரம் வட்டார கல்வி அலுவலர் சூசை, ஆசிரியர் பயிற்றுனர் ஈஸ்வர வேலு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நாகராஜன், ரமேஷ் பங்கேற்றனர்.
*கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்தது. மாணவர்களின் குழு நடனம், தனி நடனம், பரதநாட்டியம், பேச்சுப்போட்டி மற்றும் தனித் திறன் போட்டிகள், கலைநய பொருட்கள் செய்தல் போட்டிகள் நடந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் கணேச பாண்டியன் முன்னிலை வகித்தார். கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜன் வரவேற்றார்.
பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலர் சேதுராமன், கடலாடி வட்டார கல்வி அலுவலர் வசந்த பாரதி, ருக்மணி உட்பட பலர் பங்கேற்றனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் மோகனவள்ளி நன்றி கூறினார்.