நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான கலைத்திறன் போட்டிகள் நடந்தது. தலைமை ஆசிரியை மெஸ்ஸி ஆனந்தி தலைமை வகித்தார். முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சசிகுமார், செயலாளர் பகுர்தீன் முன்னிலை வகித்தனர். மாணவர்களின் கலை திறன் போட்டிகள் நடந்தன.
முன்னாள் மாணவர் சங்கத் துணை அவைத் தலைவர் ஆசிரியை ஜோதி, வார்டு கவுன்சிலர் வைரவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.