ADDED : மார் 02, 2024 11:44 PM
அ நிறம் | அளவு
தொண்டி: தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் 25. அறந்தாங்கியிலிருந்து தொண்டி செல்லும் தனியார் பஸ் டிரைவராக உள்ளார்.
நேற்று முன்தினம் எஸ்.பி.பட்டினம் பஸ்ஸ்டாப்பில் பஸ் நிற்கும் போது, ஆட்டோவில் சிலர் அங்கிருந்த பயணிகளை ஏற்றினர். இதை தட்டிக்கேட்ட நவநீதகிருஷ்ணன் தாக்கபட்டார்.நவநீதகிருஷ்ணன் புகாரில் எஸ்.பி.பட்டினம்போலீசார் சோழகன்பேட்டையை சேர்ந்த அய்யப்பன் 43, என்பவரை தேடிவருகின்றனர்.
