sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மணல் கடத்தலை தடுத்ததால் வி.ஏ.ஓ.,வை கொல்ல முயற்சி

/

மணல் கடத்தலை தடுத்ததால் வி.ஏ.ஓ.,வை கொல்ல முயற்சி

மணல் கடத்தலை தடுத்ததால் வி.ஏ.ஓ.,வை கொல்ல முயற்சி

மணல் கடத்தலை தடுத்ததால் வி.ஏ.ஓ.,வை கொல்ல முயற்சி


ADDED : ஜூலை 28, 2025 03:10 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 03:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: தொண்டி அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற வி.ஏ.ஓ., மற்றும் போலீசார் மீது லாரி ஏற்ற முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கிடங்கூர் பாம்பாற்றில் மணல் திருடப்படுவதாக தகவல் கிடைத்தது. பாகனுார் வி.ஏ.ஓ., கிராணவள்ளி, எஸ்.பி.பட்டினம் சிறப்பு எஸ்.ஐ., பாலு, போலீஸ்காரர் முகமது அஸ்லாம், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, மணல் கடத்தலை தடுக்க சென்றனர்.

அங்கு, லாரியில் மணல் அள்ளி கொண்டிருந்தவர்களை பிடிக்க முயன்ற போது, ஒரு லாரி அவர்களை நோக்கி மோதுவது போல் வேகமாக வந்தது. வி.ஏ.ஓ., மற்றும் போலீசார் சுதாரித்து விலகி தப்பினர். பின், லாரி அங்கிருந்து சென்றது.

வி.ஏ.ஓ., கிராணவள்ளி புகாரில், பெருவண்டலை சேர்ந்த ஜெயக்குமார், 34, சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே பிராந்தனியை சேர்ந்த செல்வகுமார், 41, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், நத்தக்கோட்டையை சேர்ந்த மாலா, 35, ராஜேஷ், 40, சரவணன், 21, ஹரிகரன், 24, ஆகியோரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us