ADDED : ஏப் 09, 2026 06:36 PM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: சமரச தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. முன்னதாக மாவட்ட முதன்மை நீதிபதி மெஹபூப் அலிகான் சமரச விழிப்புணர்வு பற்றி பேசி மக்களிடம் நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
நீதிபதிகள் கவிதா, ஜெய சுதாகர், பாஸ்கர், மும்தாஜ், நிலவேஸ்வரன், சட்டக்கல்லுாரி முதல்வர் ஜேம்ஸ் ஜெயபால், வழக்கறிஞர் சங்கத்தலைவர் அன்புச்செழியன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள், சட்டக்கல்லுாரி மாணவர்கள், நீதிமன்ற அலுவலர்கள் பங்கேற்றனர்.-----
