நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே செல்வநாயகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தீயணைப்புத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு நிலைய அலுவலர் மாடசாமி தலைமை வகித்தார். பேரிடர் காலங்களில் தண்ணீரில் சிக்குபவர்களை மீட்பது, தீயை அணைப்பது, முதலுதவி அளிப்பது, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்து தீயணைப்புத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முதுகுளத்துார் கண்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

