நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் தாலுகா அலுவலகம் சார்பில் வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம், துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட பிற் படுத்தப்பட்ட நல அலுவலர் ராஜா துவக்கி வைத்தார். தாசில்தார் கோகுல்நாத், துணை தாசில்தார் தமிழ்மதி, ஆர்.ஐ.,க்கள் பெரியசாமி, தினேஷ் முன்னிலை வகித்தனர்.
காந்தி சிலையில் துவங்கி பஜார், பஸ் ஸ்டாண்ட் வரை மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகள் கையில் ஏந்தி ஊர்வலமாக சென்று துண்டு பிரசுரம் வழங்கினர். பின்பு முதுகுளத்துார் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு போட்டிகள் நடந்தது. பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினர்.

