ADDED : ஜூலை 10, 2025 10:51 PM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்; முதுகுளத்துார் பகுதியில் வெளி மாவட்டங்களில் விளையக்கூடிய மாம்பழங்களை சரக்கு வாகனத்திலும், கடையில் வைத்தும் விற்பனை செய்யப்படுகிறது. கெட்டுப்போன மாம்பழங்களை முதுகுளத்துார் நீதிமன்றம் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலை ரோட்டோரத்தில் கொட்டி சென்றுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. புறவழிச்சாலையில் காலை, மாலை நேரத்தில் நடைபயிற்சி செல்வதால் துர்நாற்றத்தால் நடப்பதற்கு சிரமப்படுகின்றனர். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து ரோட்டோரத்தில் கொட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
