sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரத்தில் மீன்பிடிக்க தடை புதுக்கோட்டையில் மட்டும் ஓ.கே., மீனவர்கள் எதிர்ப்பு

/

ராமேஸ்வரத்தில் மீன்பிடிக்க தடை புதுக்கோட்டையில் மட்டும் ஓ.கே., மீனவர்கள் எதிர்ப்பு

ராமேஸ்வரத்தில் மீன்பிடிக்க தடை புதுக்கோட்டையில் மட்டும் ஓ.கே., மீனவர்கள் எதிர்ப்பு

ராமேஸ்வரத்தில் மீன்பிடிக்க தடை புதுக்கோட்டையில் மட்டும் ஓ.கே., மீனவர்கள் எதிர்ப்பு


ADDED : டிச 12, 2024 04:56 AM

Google News

ADDED : டிச 12, 2024 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்கிய நிலையில் ராமேஸ்வரத்தில் தடை விதிக்கப்பட்டதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர். இதனால் 1500 விசைப்படகுகள், நாட்டுப்படகுகளை கரையில் நிறுத்திய மீனவர்கள் வேலையின்றி வீடுகளில் முடங்கினர்.

ஆனால் நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல அங்குள்ள மீன்துறை அதிகாரிகள் அனுமதி டோக்கன் வழங்கி உள்ளனர்.

இந்நிலையில் ராமேஸ்வரம் பகுதி மீனவர்களுக்கு தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் சகாயம் கூறியதாவது:

டிச.4ல் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததை கண்டித்து ஸ்டிரைக் செய்தோம். பின் டிச.9ல் மீன்பிடிக்கச் சென்ற போது முன் அறிவிப்பு இன்றி 125 படகுகளுக்கு மீன்துறை அதிகாரிகள் தடை விதித்தனர். இதனால் 500 படகுகளில் ஐஸ் பார்கள், உணவுப் பொருள்கள் ஏற்றியதால் ரூ.30 லட்சம் வீணாகியது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களுக்கு அனுமதியும், ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை விதித்தது எப்படி சாத்தியமாகும். வானிலை அறிக்கை இரு மாவட்டத்திற்கு தனித்தனியாக தெரிவித்து உள்ளதா.

அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் இன்றும் மீன்பிடிக்க முடியாமல் மீனவர்கள் வருவாய் இன்றி தவிக்கிறோம். கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை கொண்டாட முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us