/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பச்சை மரகத நடராஜரை அலங்கரிக்க பெங்களூரு சந்தனக்கட்டை அரைப்பு
/
பச்சை மரகத நடராஜரை அலங்கரிக்க பெங்களூரு சந்தனக்கட்டை அரைப்பு
பச்சை மரகத நடராஜரை அலங்கரிக்க பெங்களூரு சந்தனக்கட்டை அரைப்பு
பச்சை மரகத நடராஜரை அலங்கரிக்க பெங்களூரு சந்தனக்கட்டை அரைப்பு
ADDED : ஜன 10, 2025 02:39 AM
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் ஆருத்ரா தரிசன விழாவில் ஜன.13ல் பச்சை மரகத நடராஜருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்வதற்காக பெங்களூருவில் வாங்கிய சந்தனக்கட்டைகள் ஸ்ரீரங்கத்தில் அரைக்கப்படுகிறது.
உலகில் முதன் முதலாக தோன்றிய சிவன் கோயில் எனப்படும் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் இந்தாண்டு ஆருத்ரா தரிசனவிழா ஜன.4 முதல் 13 வரை நடக்கிறது.
இங்கு தனி சன்னதியில் உள்ள அபூர்வ பச்சை மரகத நடராஜர் ஆண்டு முழுதும் சந்தனம் பூசப்பட்ட நிலையில் இருக்கும். ஆருத்ரா அபிேஷகத்தன்று மட்டும் சந்தனம் களையப்பட்டு பலவகை திரவியங்களால் நடராஜருக்கு அபிேஷகம் நடக்கும். இந்த ஆண்டு ஜன.12ல் சந்தனம் படி களையப்பட்டு காலை 9:00 மணி முதல் பலவகை திரவியங்களால் அபிேஷகம் நடக்கும். மறுநாள் (ஜன.13) அதிகாலை 1:00 மணி முதல் 2:00மணி வரை ஆருத்ரா மகா அபிேஷகம் நடக்கிறது. அதன் பிறகு நடராஜர் சிலைக்கு மீண்டும் சந்தனக்காப்பிட்டு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடக்கும்.
ராமநாதபுரம் சமஸ்தானம் திவான் பழனிவேல் பாண்டியன் கூறியதாவது: பச்சை மகரத நடராஜர் சிலையில் பூசுவதற்காக பிரத்யேகமாக பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து 70 கிலோ சந்தன கட்டைகள் வாங்கியுள்ளோம். அவற்றை அரைக்கும் பணிகள் நடக்கிறது. கிழக்கு, மேற்கு வாசலும் திறக்கப்பட்டு மரகத நடராஜர் மட்டுமின்றி, அம்மன், சுவாமி சன்னதிகளிலும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இதற்காக கட்டண, இலவச தரிசன வழியில் தடுப்புகள் அமைக்கப்படும். பக்தர்கள் சிரமம் இன்றி விரைந்து சுவாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகளை செய்துள்ளோம் என்றார்.