sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பேனர்:

/

பேனர்:

பேனர்:

பேனர்:


ADDED : ஆக 12, 2024 05:05 AM

Google News

ADDED : ஆக 12, 2024 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆன்மிக சுற்றுலா தலமாக ராமேஸ்வரம் உள்ளது. ராமேஸ்வரத்திற்கு வட மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அப்படி இருந்தும் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து ராமேஸ்வரம் இன்னும் இணைக்கப்படாத நிலை தான் உள்ளது.

இந்திய தலைநகரமான புதுடெல்லி, கோல்கட்டா, மும்பை, பெங்களூரு, ைஹதராபாத், லக்னோ, மைசூரு, புனே, வாரணாசி, அகமதாபாத், ஆக்ரா, கொச்சி, புதுச்சேரி, புவனேஸ்வர்போன்ற பல்வேறு நகரங்கள் உள்ளன.

இந்த நகரங்களில் இருந்து ராமேஸ்வரம் வருவதற்கு அவர்கள் மதுரைக்கு வந்து ரயில் மாறி ராமேஸ்வரம் பகுதிக்கு வரும் நிலை உள்ளது. இந்நிலையை மாற்றி முக்கிய நகரங்களில் இருந்து ராமேஸ்வரம் பகுதிக்கு நேரடியாக ரயில்கள் இயக்கப்படுவதில்லை.

இந்தப்பகுதிகளில் இருந்து ராமேஸ்வரம் வர நினைக்கும் பக்தர்கள் வசதிக்காக நேரடியாக ராமேஸ்வரத்திற்கு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

மாதவன், வழக்கறிஞர்கள் சங்க துணைத்தலைவர்: அக்.1 முதல் பாம்பன் பாலம் பணிகள் முடிக்கப்பட்டு ராமேஸ்வரம் வரை ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நேரடியாக ரயில் சேவைகள் இருந்தால் பயணிகள் எளிதாக ராமேஸ்வரம் வந்து செல்ல முடியும்.

ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து முக்கியமான நகரங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ரயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர் என்றார்.






      Dinamalar
      Follow us