ADDED : செப் 24, 2024 04:23 AM
அ நிறம் | அளவு
கீழக்கரை: மன்னார் வளைகுடா கடற்கரையோர பகுதிகளில் கீழக்கரை ரோட்டரி சங்கம், ஆர்.கே.ஈசன் சிலம்பம் பவுண்டேஷன் சார்பில் துப்புரவு பணி நடந்தது.
ரோட்டரி சங்கத் தலைவர் கேசவன் தலைமை வகித்தார். செயலாளர் சிவகார்த்திக் முன்னிலை வகித்தார். ஆர்.கே. ஈசன் சிலம்பம் பவுண்டேஷன் தலைவர் ஜெயமுருகன், முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம், சுப்பிரமணியன், தமீமுதீன் பங்கேற்றனர். பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நடத்தி துணிப்பை வழங்கப்பட்டது.
