/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கைக்கு கடத்திய பீடி இலைகள் பறிமுதல்
/
இலங்கைக்கு கடத்திய பீடி இலைகள் பறிமுதல்
ADDED : நவ 18, 2024 04:15 AM

ராமேஸ்வரம்: இலங்கை கல்பெட்டியா கடலோரத்தில், அந்நாட்டு கடற்படையினர் கப்பலில் ரோந்து சென்றபோது, சந்தேகத்துக்குரிய இலங்கை படகை மடக்கி சோதனையிட்டனர். இதில், 1,263 கிலோ பீடி இலைகள், 118 கிலோ சுருட்டுகள் இருந்தன. இதை பறிமுதல் செய்த இலங்கை வீரர்கள், படகில் இருந்த இலங்கை கடத்தல்காரர்கள் இருவரை கைது செய்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கடத்தல்காரர்களிடம் இலங்கை போலீசார் நடத்திய விசாரணையில், சுருட்டு, பீடி இலைகளை தமிழகத்தில் இருந்து கடத்தல்காரர்கள் நாட்டுப்படகில் கடத்தி வந்ததாக தெரிவித்தனர். இதன் மதிப்பு, 5 லட்சம் ரூபாய்.
இந்த பீடி இலைகள், சுருட்டுகளை, துாத்துக்குடி மாவட்ட கடலோர பகுதியில் இருந்து நாட்டுப்படகில் மீனவர்கள் போர்வையில் கடத்தல்காரர்கள் கடத்தி சென்றுள்ளனர். இக்கடத்தல் கும்பல் யார் என மத்திய, மாநில உளவு போலீசார் விசாரிக்கின்றனர்.