sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தேர்த்தங்கல்  சரணாலயத்திற்கு பறவைகள் வருகை

/

தேர்த்தங்கல்  சரணாலயத்திற்கு பறவைகள் வருகை

தேர்த்தங்கல்  சரணாலயத்திற்கு பறவைகள் வருகை

தேர்த்தங்கல்  சரணாலயத்திற்கு பறவைகள் வருகை


ADDED : நவ 07, 2024 02:12 AM

Google News

ADDED : நவ 07, 2024 02:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:தொடர் மழையால் ராமநாதபுரம் அருகே தேர்த்தங்கல் பறவைகள் சரணாலய கண்மாயில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கியுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்த்தங்கல், மேலச் செல்வனுார், சித்திரங்குடி, காஞ்சிரங்குடி ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன.

இங்கு ஆண்டு தோறும் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக வருகின்றன.

கூழைக்கடா, செங்கால் நாரை, கரண்டிவாயன், மஞ்சள் மூக்கு நாரை போன்ற பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக அக்டோபரில் வந்து மார்ச் வரை தங்கி அதன் பின் இடம் பெயர்கின்றன.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்றி அக்டோபரில் சரணாலங்களுக்கு பறவைகள்வரவில்லை. கடந்த ஒருவாரமாக ராமநாதபுரம், பரமக்குடியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சரணாலயம், கண்மாய், குளங்களில் தண்ணீர் உள்ளது.

குறிப்பாக தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் தண்ணீர் உள்ளது.

இதையடுத்து வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம் கூட்டமாக வரத்துவங்கியுள்ளன. அடுத்துவரும் நாட்களில் மேலும் அதிகளவில் பறவைகள் வர வாய்ப்பு உள்ளதாக இப்பகுதி விவசாயிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us