நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழாவில் செங்கமடை கிராமத்தார்களின் மண்டகப்படி நிகழ்வாக அபிமன்யு பிறப்பு நடைபெற்றது.
முன்னதாக மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து கிராமத்தார்கள் வழிபாடு செய்தனர். தொடர்ந்து, திரவுபதி, அபிமன்யு குறித்த வரலாற்று நிகழ்வுகள் பக்தர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
விழாவின் தொடர்ச்சியாக இளைஞர்களின் வீமன் வேட நிகழ்வு நடைபெற்றது.