ADDED : செப் 25, 2024 03:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் பா.ஜ., இளைஞர் அணி சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடந்தது.
மாவட்டத் தலைவர் தரணி முருகேசன் தலைமை வகித்தார். நிர்வாகிகள், உறுப்பினர்கள் ரத்த தானம் செய்தனர். மாவட்ட பார்வையாளர் முரளிதரன், பொதுச்செயலாளர் ஆத்மா கார்த்திக், நகராட்சி கவுன்சிலர் குமார், நிர்வாகிகள், பங்கேற்றனர்.