ADDED : அக் 19, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : -கமுதி அருகே கோட்டைமேடு பசும்பொன் திருமுத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லுாரியில் தேவர் குருபூஜை முன்னிட்டு ரத்ததான முகாம் நடந்தது.
முதல்வர் சரவணகுமார் தலைமை வகித்தார். அலுவலக உதவியாளர் சத்தியநாதன், டாக்டர்கள் முரளிதரன், பிரகாஷ்,ரூபன் தீனா முன்னிலை வகித்தனர். இதில் கல்லூரி சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் கோவை, ஜி.கே.பி. தொண்டு நிறுவனம், தேவர் கல்லுாரி ரத்தம் கொடையாளர் சங்கம், ஒருங்கிணைப்பாளர்கள் ஆதிமூலம், பாண்டியன், விக்டோரியா பங்கேற்றனர்.