ADDED : அக் 11, 2025 04:05 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லுாரியில் என்.சி.சி., மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். முதல்வர் சீனிவாசகுமரன் தலைமை வகித்தார்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள் சங்கத் தலைவர் மலையரசு முகாமை துவக்கி வைத்தார். காரைக்குடி மண்டல என்.சி.சி., பிரிவை சேர்ந்த 60 மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். என்.சி.சி., அலுவலர் உத்தரசெல்வம் ஒருங்கிணைத்தார்.
