sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

காரங்காட்டில் மீண்டும் படகு சவாரி

/

காரங்காட்டில் மீண்டும் படகு சவாரி

காரங்காட்டில் மீண்டும் படகு சவாரி

காரங்காட்டில் மீண்டும் படகு சவாரி


ADDED : டிச 03, 2024 05:37 AM

Google News

ADDED : டிச 03, 2024 05:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: தொண்டி அருகே காரங்காட்டில் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக படகு போக்குவரத்து துவங்கியது.

தொண்டி அருகே காரங்காடு கடற்கரை சதுப்பு நிலக்காடுகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. இயற்கை தந்த கொடையாக அனைவருடைய மனதை கவரும்வகையில் மாங்குரோவ் காடுகள் அடர்த்தியாக உள்ளன. இப்பகுதி சுற்றுலா தலமாக அறிவிக்கபட்டதால் வெளி மாவட்டங்களிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

சுற்றுலா பயணிகளை அழைத்து கடலுக்குள் சென்று சுற்றி காட்டுவதற்காக வனத்துறை சார்பில் படகு சவாரி, கயாக்கிங் எனப்படும் துடுப்பு சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அலையாத்தி (மாங்குரோவ்) காடுகளுக்கு இடையே செல்லும் போது பறவைகளை கண்டு ரசிக்கலாம்.

விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். கடந்த சில நாட்களாக தொடர் மழையால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. இந்நிலையில் புயல் எச்சரிக்கையால் படகு போக்குவரத்து நவ.24 முதல் நிறுத்தப்பட்டது.

ஆனால் இப்பகுதியில் புயல் எச்சரிக்கையால் எந்த பாதிப்பும் இல்லை. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.இதுகுறித்த செய்தி தினமலர் நாளிதழில் நேற்று வெளியானது. இதன் எதிரொலியாக இன்று முதல் படகு போக்குவரத்து துவங்கியது.






      Dinamalar
      Follow us