/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பலகை உடைந்து படகு மூழ்கியது; 4 மீனவர்கள் மீட்பு
/
பலகை உடைந்து படகு மூழ்கியது; 4 மீனவர்கள் மீட்பு
ADDED : டிச 30, 2024 11:37 PM

திருவாடானை; ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி சோலியக்குடியைச் சேர்ந்தவர் விசாலாட்சி. இவருக்கு சொந்தமான விசைப்படகில் நம்புதாளை கருப்பையா 39, தளிர்மருங்கூர் தெற்கு குடியிருப்பு சேகர் 52, சோலியக்குடி லாஞ்சியடி ஞானசேகரன் 67, சம்பை சந்தியாகு 52, ஆகியோர் நேற்று காலை 8:00 மணிக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
நீண்ட துாரம் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது மாலை 5:00 மணிக்கு படகில் பலகை உடைந்தது. இதனால் கடல் நீர் புகுந்ததால் படகு மூழ்கத் துவங்கியது. அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்கள் சென்று நான்கு மீனவர்களையும் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். மூழ்கிய படகை மீட்கும் பணி இன்று (டிச.,31) நடக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர்.