sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

காரங்காட்டில் படகு போக்குவரத்து நிறுத்தம்  மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை 

/

காரங்காட்டில் படகு போக்குவரத்து நிறுத்தம்  மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை 

காரங்காட்டில் படகு போக்குவரத்து நிறுத்தம்  மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை 

காரங்காட்டில் படகு போக்குவரத்து நிறுத்தம்  மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை 


ADDED : ஜூலை 26, 2025 11:31 PM

Google News

ADDED : ஜூலை 26, 2025 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: பலத்த காற்று வீசுவதால் காரங்காட்டில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது தொண்டி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தொண்டி அருகே காரங்காடு கடற்கரை சதுப்பு நிலக்காடுகளை உள்ளடக்கி அமைந்துள்ளது.

இயற்கை தந்த கொடையாக அனைவருடைய மனதை கவரும் வகையில் மாங்குரோவ் காடுகள் அடர்த்தியாக உள்ளன.

இப்பகுதி சுற்றுலா தலமாக அறிவிக்கபட்டதால் வெளி மாவட்டங்களிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளை அழைத்து கடலுக்குள் சென்று சுற்றி காட்டுவதற்காக வனத்துறையினர் சார்பில் படகு சவாரி, கயாக்கிங் எனப்படும் துடுப்பு சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சில நாட்களாக பலத்த காற்று வீசுவதால் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தொண்டி மீன்வளத்துறை மற்றும் வனத்துறையினர் கூறுகையில், பாதுகாப்பு நலன் கருதி நேற்று முன்தினம் முதல் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்நிலை நீடிக்கும்.

அதே போல் மீனவர் களின் பாதுகாப்பை கருதி ராமநாதபுரம் மாவட்டம் (வடக்கு) ஆற்றங்கரை முதல் எஸ்.பி.பட்டினம் வரை உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது என்றனர்.






      Dinamalar
      Follow us