sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

புயல் எச்சரிக்கையால் தொண்டி காரங்காட்டில் படகு சவாரி நிறுத்தம்

/

புயல் எச்சரிக்கையால் தொண்டி காரங்காட்டில் படகு சவாரி நிறுத்தம்

புயல் எச்சரிக்கையால் தொண்டி காரங்காட்டில் படகு சவாரி நிறுத்தம்

புயல் எச்சரிக்கையால் தொண்டி காரங்காட்டில் படகு சவாரி நிறுத்தம்


ADDED : நவ 25, 2024 11:42 PM

Google News

ADDED : நவ 25, 2024 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை; புயல் எச்சரிக்கையால் தொண்டி அருகே காரங்காட்டில் மாங்ரோவ் காடுகளை சுற்றுலாப்பயணிகள் ரசிப்பதற்கான படகு சவாரி நிறுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காரங்காடு கடற்கரை சதுப்பு நிலக்காடுகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. இயற்கை தந்த கொடையாக அனைவரின் மனதைக் கவரும் வகையில் இங்கு மாங்குரோவ் காடுகள் அடர்த்தியாக உள்ளன. சூழல் சுற்றுலா மையமான இங்கு மாங்ரோவ் காடுகளின் அழகை ரசிக்க வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

சுற்றுலா பயணிகளை அழைத்து கடலுக்குள் சென்று மாங்ரோவ் காடுகளை சுற்றிக் காட்டுவதற்காக வனத்துறை சார்பில் படகு சவாரி, கயாக்கிங் எனப்படும் துடுப்பு சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அலையாத்தி(மாங்ரோவ்) காடுகளுக்கு இடையே செல்லும் போது பறவைகளை கண்டு ரசிக்கலாம். விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக தொடர் மழையால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தது. தற்போது வங்க கடலில் புயல் எச்சரிக்கையால் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

வனத்துறையினர் கூறுகையில், புயல் எச்சரிக்கை அறிவிப்பால் படகு போக்குவரத்து நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வந்த பின் படகு போக்குவரத்து மீண்டும் துவங்கும் என்றனர்.






      Dinamalar
      Follow us