/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் மீனவர்களுக்கு ஜன.31 வரை சிறை
/
பாம்பன் மீனவர்களுக்கு ஜன.31 வரை சிறை
ADDED : ஜன 18, 2024 02:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்:இலங்கை கடற்படை கைது செய்த பாம்பன் மீனவர்கள் 18 பேரை ஜன. 31 வரை சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜன.16ல் ராமேஸ்வரம் அருகே பாம்பனில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில், பாம்பன் சேர்ந்த சுப்ரியான், அன்றன் ஆகிய இருவரது விசைப்படகை இலங்கை கடற்படை வீரர்கள் மடக்கி பிடித்து, படகில் இருந்த 18 மீனவர்களை கைது செய்து மன்னார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
நேற்று மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீன்துறையினர் வழக்குப் பதிந்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின் மீனவர்களை ஜன.31 வரை வவுனியா சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டனர்.