ADDED : செப் 01, 2025 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த சத்திரக்குடி பகுதி அரியகுடி கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டி மகன் திவின் குமார் 10. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்தான்.
நேற்று மாலை 4:00 மணிக்கு அரியக்குடி கிராம கண்மாய் பகுதியில் கால் கழுவு சென்றுள்ளான்.
நீண்டநேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் இளைஞர்கள் கண்மாய் பகுதியில் தேடினர்.
தீயணைப்பு வீரர்களும் தேடிய நிலையில் இரவு 9:00 மணிக்கு மேல் அங்கிருந்து சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்.
கண்மாயில் மூழ்கி பலியானது தெரியவந்தது. சத்திரக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.