sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட சிறுவன் ஓராண்டிற்கு பின் பீகார் அனுப்ப முடிவு

/

ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட சிறுவன் ஓராண்டிற்கு பின் பீகார் அனுப்ப முடிவு

ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட சிறுவன் ஓராண்டிற்கு பின் பீகார் அனுப்ப முடிவு

ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட சிறுவன் ஓராண்டிற்கு பின் பீகார் அனுப்ப முடிவு


ADDED : ஏப் 24, 2025 03:07 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்,:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட 17 வயது பீகார் மாநில சிறுவனை ஒராண்டுக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைக்க உள்ளனர்.

பரமக்குடி ரயில் நிலையத்தில் திரிந்த 17 வயது சிறுவனை சைல்டு லைன் பணியாளர்கள் 2024 ஏப்., 16 ல் மீட்டு காரைக்குடி அரசு குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் சேர்த்தனர். அவரது முகவரியை அறிந்து பெற்றோரிடம் ஒப்படைக்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சிவக்குமாருக்கு உத்தரவிட்டார்.

சிறுவன் மன வளர்ச்சி இல்லாமல், வாய் பேச முடியாத நிலையில் இருந்ததால் அவரது முகவரியை பெற முடியவில்லை. ஆதார் பதிவு மூலம் சிறுவன் முகவரியை கண்டறிய நடவடிக்கை எடுத்தனர். தனிப்பட்ட நபர்களின் விபரங்களை நீதிமன்ற உத்தரவு இல்லாமல் வழங்க முடியாது என்பதால் சிவக்குமார் ராமநாதபுரம் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி பிரசாத்திடம் மனு செய்தார்.

பிரசாத் மதுரை சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் பெயரில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்தனர்.

நீதிமன்றம் ஆதார் பதிவு மையமான இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தை சிறுவனின் முகவரியை குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சிவக்குமாரிடம் வழங்க உத்தரவிட்டது. அதன்பின் முகவரி பெறப்பட்டு சிறுவனை பீகாரில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலமாக பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us