sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மூளைச்சாவு அடைந்த நபரால் 5 பேருக்கு மறுவாழ்வு

/

மூளைச்சாவு அடைந்த நபரால் 5 பேருக்கு மறுவாழ்வு

மூளைச்சாவு அடைந்த நபரால் 5 பேருக்கு மறுவாழ்வு

மூளைச்சாவு அடைந்த நபரால் 5 பேருக்கு மறுவாழ்வு


ADDED : டிச 28, 2024 07:23 AM

Google News

ADDED : டிச 28, 2024 07:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : - கடலாடி அவதாண்டை கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா 37. விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு 5 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.

டிச. 24ல் இளையராஜா ரோடு விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் டிச. 25ல் சேர்க்கப்பட்டார். டிச. 27 அதிகாலையில் அவரது மூளை நிரந்தரமாக செயலற்ற நிலைக்கு சென்றதை டாக்டர்கள் உறுதி செய்தனர். அவரது இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல் இயங்கும் நிலையில் இருந்ததால் குடும்பத்தினரிடம் உறுப்பு தானம் குறித்து டாக்டர்கள் விளக்கினர். சிறுநீரகங்களில் ஒன்று அம்மருத்துவமனை நோயாளிக்கும் மற்றொன்று பெரம்பலுார் தனலட்சுமி ஸ்ரீநிவாசன் மருத்துவக் கல்லுாரிக்கும், கருவிழிகள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் கல்லீரல் மதுரை அப்போலோ மருத்துவமனைக்கும் எடுத்துச் செல்லப்பட்டது.

சில நாட்களுக்கு முன் இதே ராமநாதபுரம் கடலாடி மேலகிடாரத்தைச் சேர்ந்த சஞ்சய், 22 ரோடு விபத்தில் சிக்கி டிச. 24 ல் மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது இதயம் உட்பட 6 உறுப்புகள் எடுக்கப்பட்டு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us