/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோயில் விழாவில் மாட்டுவண்டி பந்தயம்
/
கோயில் விழாவில் மாட்டுவண்டி பந்தயம்
ADDED : ஆக 21, 2025 11:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி அருகே கே.வேப்பங்குளம் கிராமத்தில் அரியநாச்சி அம்மன் கோயில், ஆடிப்பொங்கல் முளைப்பாரி விழாவில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
சின்னமாடு, பெரியமாடு என இரு பிரிவுகளாக நடந்த போட்டியில் ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40 இரட்டை மாட்டு வண்டிகள் மற்றும் பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் முதல் நான்கு இடங்களை பெற்றவர் களுக்கு ரொக்கப் பணம், குத்துவிளக்கு, நினைவு பரிசு வழங்கப்பட்டது. பொதுமக்கள் ரோட்டின் இருபுறங்களிலும் நின்று மாட்டு வண்டி பந்தயத்தை கண்டு ரசித்தனர்.